தூத்துக்குடியில் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி : சீலா மீன் கிலோ 1,200-க்கும், ஊலி கிலோ 600க்கும் விற்பனை

Jun 3 2023 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் காரணமாக தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் கேரள கடற்பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுக கூடத்தில் மீன்களை வாங்க காலை முதலே கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டாலும், தமிழகம் மற்றும் கேரள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சீலா மீன் கிலோ ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 300 வரையும், ஊலி கிலோ 600 ரூபாய் வரையும், பாறை கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00