நெல்லையில் கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கொத்தனார் கைது : பொதுமக்கள் அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதால் போலீஸ் நடவடிக்கை
Jun 3 2023 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாச்சான்குளம் மேலூரை சேர்ந்த குமரேசன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை நேற்று கைது செய்தார்.