கிருஷ்ணகிரியில் HP பெட்ரோல் நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதம்
Jun 3 2023 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்பட்டு வரும் HP பெட்ரோல் நிலையத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எரிபொருள் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் குடிநீர் கேன்களில் பெட்ரோல் நிரப்பியபோது வழக்கமான நிறத்தில் இல்லாமல் தெளிந்த நிலையில் இருந்ததால் தண்ணீர் கலந்திருக்கலாம் என வாகன ஓட்டிகள் சந்தேகித்தனர். பின்னர் தண்ணீர் கலந்து விநியோகிப்பது உறுதியானதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் குவிய தொடங்கினர். போலீசார் பொதுமக்களை அனுப்பி வைத்து நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.