நெல்லை அருகே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி : குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
Jun 10 2023 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். களக்காடு நகராட்சி பகுதிக்கு கடந்த சில நாட்களாக தாமிரபரணி குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோவில் பத்து பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் சப்ளை தடைபட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் காமராஜர் சிலை அருகே திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.