சென்னை-அரக்கோணம் மின்சார ரயிலில் கஞ்சா கடத்திய நபர் கைது : 10.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
Jun 10 2023 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில், கஞ்சா கடத்திய ஒருவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். திருமால்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த ஒருவரின் பையை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில், பத்து பண்டல்களில் கஞ்சா கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது வயதுடைய நாராயணன் என்பவரை கைது செய்த காவல்துறையினர், பத்தரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.