தூத்துக்குடியில் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவு : மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி
Jun 10 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் குறைவான அளவு நாட்டுப் படகு மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர். இதனால் திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. எனினும், தமிழகம் மற்றும் கேரள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சீலா மீன் கிலோ ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 300 வரையும், விளை மீன் கிலோ 600 வரையும் விற்பனையானது.