திருச்சி அருகே தங்கக் கட்டிகள் தருவதாகக் கூறி ரூ.14.50 லட்சம் மோசடி : 4 பேர் கைது - தப்பியோடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
Sep 22 2023 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தங்கக் கட்டிகள் தருவதாக 15 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா, தன்னிடம் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருப்பதாக தஞ்சை மாவட்டம் பண்டாராவாடையைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தங்கக்கட்டிகளை தான் வாங்கி கொள்வதாகக் கூறி ஜியாவுதின், அன்வர் பாஷாவிடம் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இதையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு, தங்க கட்டிகள் எதையும் தராமல் அன்வர்பாஷாவும் அவருடன் வந்த 6 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி போலீசார், தப்பியோடிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.