சென்னை வில்லிவாக்கத்தில் வயதான முதியவர்களை கட்டிப் போட்டு 75 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் பணம் கொள்ளை : சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
Sep 22 2023 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வில்லிவாக்கம் அருகே வீடு புகுந்து வயதான முதியவர்களை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த முதியவர் சோழன் என்பவர், தனது மனைவியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, சோழனின் வீட்டின் கதவை உடைத்த 5 பேர் கொண்ட கும்பல், சோழனையும் அவரது மனைவியையும் கத்தி முனையில் கட்டிபோட்டு, 75 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.