ராசிபுரம் அருகே வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு கட்டிடத் தொழிலாளி தற்கொலை : போலீசார் வழக்குப் பதிந்து கந்துவட்டி கொடுமையா என விசாரணை
Sep 22 2023 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராசிபுரம் அருகே வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அச்சுக்கட்டி தெரு பகுதியில் வசித்து வந்த கட்டட தொழிலாளியான சாகுல் ஹமீத்துடன் வேலை செய்யும் பூபாலன் என்பவர் 10 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை திருடி விற்றுள்ளார். பின்னர் ஒரு வீட்டில் திருடும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட நிலையில், தாங்கள் திருடும் பங்கை சாகுல் ஹமீதுக்கும் தருவதாக பூபாலன் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாகுல் ஹமீத், பிரபாகரன் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உரிய நபர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பூபாலன் மீண்டும் ஒரு இடத்தில் திருடிவிட்டு, நீதான் பணம் கொடுக்க வேண்டும் என பிரபாரனுடன் சேர்ந்து மிரட்டியதால் சாகுல் ஹமீத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.