தமிழ்நாட்டில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு இடைக்காலத்தடை : விசாரணை நிறைவடையும் வரை பழைய நடைமுறையை கடைபிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 25 2023 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆகம இந்து கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நடைமுறையை எதிர்த்து அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள ஆகம இந்து கோயில்களில் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடையும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.