நெல்லை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் கையை கடித்த வேதியியல் ஆசிரியை : 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை
Sep 28 2023 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் கையை வேதியியல் ஆசிரியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வேதியியல் ஆசிரியையான ஸ்டெல்லா, மாணவ, மாணவிகளை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், அவரை அழைத்து தலைமை ஆசிரியை ரத்னாதேவி விசாரித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தலைமையாசிரியையின் கையை ஆசிரியை ஸ்டெல்லா கடித்துள்ளார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விசாரணை நடத்தினார்.