தூத்துக்குடியில் 13 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : காரில் 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் ஆட்சியர் உத்தரவு
Sep 28 2023 7:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடைய 13 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் ஆந்திராவில் இருந்த தூத்துக்குடிக்கு இனோவா காரில் சுமார் 228 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சேர்ந்த ஆரோன், இசக்கி கணேஷ், மூக்காண்டி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஆரோன் உள்ளிட்ட 13 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து ஆட்சியர் செந்தில்ராஜ், குண்டர் சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டார்.