வேலூர் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் - அடிப்படை வசதிகள் இன்றி துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
Nov 11 2019 9:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அண்மையில் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனைக் கண்டித்து 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்கக்கோரி அவரது உறவினர் தொடர்ந்த வழக்கில், சிறைத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே சமரச பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து, உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன், தற்போது மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.