கோடை நெருங்குவதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு - மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கூடுதல் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
Mar 1 2021 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றுமுதல், வரும் 4-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தருமபுரி, நாமக்கல், கருர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.