அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி - பைசர் நிறுவன தடுப்பூசி மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்
Jan 12 2021 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், பைசர் தடுப்பூசியின் மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்.
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோசையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முன்னுரிமையான பணி என தெரிவித்தார்.