ஃபிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று - பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் அச்சம்
Jan 12 2022 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பொதுமுக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஃபிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.