அமெரிக்காவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 2 மாத குழந்தை உள்ளிட்ட 2 பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்
Jan 12 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.
பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரான பிலடெல்பியா அருகே இந்த விபத்து நேரிட்டுள்ளது. இரண்டு மாத குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற போது ட்ரெக்ஸ் ஹில் நகர தேவாலம் ஒன்றின் முன்பாக அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இருப்பினும், அதில் பயணம் செய்த ஒரு செவிலியர் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக ஹெலிகாப்டரை விட்டு வெளியேறினர். சிறிய காயங்களுடன் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்துத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.