வெனிசுலாவில் பொதுத்துறை நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து - தீயை அணைக்க முடியாமல் திணறி வரும் தீயணைப்பு வீரர்கள்
Jan 13 2022 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெனிசுலாவில் எரிவாயு குழாய்வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் Anzoategui மாகாணத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கிழக்கு மாகாணங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் எரிவாயு குழாய்வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு பற்றி எரியும் தீணை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். எரிபொருள் குழாயில் துளையிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு சிலர் நாசவேலையில் ஈடுபட்டதால், இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.