கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
Jan 20 2022 7:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சற்றே குறைய தொடங்கி வருகிறது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் கட்டாய முகமூடிகள் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் அலை இப்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புவதாகவும், இனி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா பரவல் தொற்று குறைந்து வரும் நிலையில், இம்மாத இறுதியில் முதல் கட்டுப்பாடுகள் தேவைப்படாது என பிரிட்டனின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.