கொரோனா வைரஸ் தொற்று தற்போதைக்கு முடிவுக்கு வராது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பகிர் தகவல்
Jan 20 2022 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்று தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானோம், ஒமைக்ரான் தொற்று குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரம் குறைந்த வைரசாக இருந்தாலும், இதனை லேசான நோய் பரவலாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறினார். ஒமைக்ரானும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், கொரோனா பெருந்தொற்று தற்போதைக்கு முடிவுக்கு வராது என்றும், ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே கொரோனா தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி, கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில்தான் உலகம் இன்னும் இருப்பதாகவும், கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்து கூறி விட முடியாது என்றும் குறிப்பிட்டார்.