உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவுவது ஐரோப்பிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் - ரஷ்யா எச்சரிக்கை
Apr 29 2022 8:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவுவது ஐரோப்பிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் உள்பட பல்வேறு நாடுகள் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவுவது ஐரோப்பிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் Dmitry Peskov வெளியிட்டுள்ள அறிக்கையில், எலான் மஸ்க் வசம் சென்றுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை ரஷ்யா கவனித்து வருவதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுடனான போரில் நடப்பது குறித்து மேற்கத்திய ஊடகங்கள் திரித்து கூறுவதாகவும் Dmitry Peskov குற்றம்சாட்டினார்.