அரியலூர்: ஆலந்துரையார் கோவிலில் வராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் அருந்தவநாயகி உடனுறை ஆலந்துரையார் திருக்கோவிலில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வராஹி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வராஹி அம்மனுக்கு அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day