அரியலூர்: சாமுண்டீஸ்வரி கோயிலில் நடைபெற்ற மஹா பிரத்தியங்கிரா யாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் செந்துறை அருகே பொய்யாதநல்லூரில் பிரசித்திப் பெற்ற சாமுண்டீஸ்வரி கோவியில், மஹா பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது. தை அமாவாசையையொட்டி கோயில் வளாகத்தில், வேதமந்திரங்கள் முழங்க, பழங்கள், தானியங்களுடன் நெய் சமர்ப்பித்து மஹா யாகம் வளர்க்கப்பட்டது. இதையடுத்து, சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும் காட்சியளிக்கும் பிரத்தியங்கரா தேவிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Night
Day