ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை சுப்பிரமணி சுவாமி  கோவில் அமைந்துள்ள திருத்தணியில் அடுத்த மாதம் ஜூலை 29 ஆம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம், ஆந்திர, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். 

Night
Day