ஆண்டிமடம் ஸ்ரீ அய்யனாரப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா மற்றும் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ரெட்டப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள பூர்ணா, புஷ்கலா, சமேத ஸ்ரீ அய்யனாரப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு புனித நீரை கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வணங்கினர். பின்னர்  குடமுழுக்கு புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.




Night
Day