உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு உள்வீதி உலா கண்டார். பின்னர், பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே வந்து திருவாய்மொழி மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கமலவல்லி நாச்சியாரை வழிபட்டு சென்றனர்.

Night
Day