உற்சவ-கொடியேற்றம்:-திரளான-பக்‍தர்கள்-அம்மனை-தரிசித்தனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் ஸ்ரீகமலாம்பிகை அம்மன் ஆலய ஆடிப்பூர தேரோட்டம் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அதற்கான கொடியேற்ற வைபவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

 சிவாச்சாரியார்களின் யாகவேள்விக்‍கு பின்னர் கொடிமரத்தினை சுற்றி அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் முதலான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவ கொடிக்கு வேதமந்திரங்கள் முழங்க புஷ்பாஞ்சலி பூஜை நடத்தி 64அடி உயரமுடைய கொடிமரத்தில் உற்சவ கொடியை ஏற்றினர். கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகமலாம்பிகையை தரி​சித்தனர்.

Night
Day