உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிடுவதற்காக நேற்றிரவு திருப்பதி மலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று திருமலையில் தங்க வைத்தனர். பின்னர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அமித்ஷா கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் வரை அப்பகுதியில் பக்தர்கள் உட்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

Night
Day