கரூர்: சித்தி விநாயகர் ஆலயத்தில் தை மாதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கணபதிக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர் மாலைகள் அணிவித்து, நாமாவளி கூறி அர்ச்சனையுடன், தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டன. பின்னர், கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. 

Night
Day