கள்ளியடி குருநாதர் : 83-வது குருபூஜை - மெகா அன்னதானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளியடி குருநாதரின் 83-வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 4 டன் அரிசியில் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதுப்பட்டி பகுதியில் 1941ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த கள்ளியடி குருநாதருக்கு அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி வருகின்றனர். அதன்படி 83வது குருபூஜையை முன்னிட்டு, ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இதையடுத்து 4 டன் அரிசி, 700 கிலோ நிலக்கடலை, 35 டின் நல்லெண்ணெய், பொருட்களால் புளியோதரை தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Night
Day