சாரதாம்பாள் அம்மனுக்கு காய்கறிகளை கொண்டு காதம்பரி அலங்காரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் ஆடி மாத இரண்டாவது வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணி பீடத்தில் சாரதாம்பாள் அம்மனுக்கு காய்கறிகளை கொண்டு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக பீடாதிபதி குருஜி ஸ்ரீலஸ்ரீ சந்தோஷ் சிவாஜி சுவாமிகள் குங்குமம் மற்றும் வண்ண மலர்களால் அம்மனுக்கு உரித்தான ஆயிரத்து 8 மந்திரங்களைக் கொண்ட லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்தார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இசைப்பள்ளி குழந்தைகள் ஒருங்கிணைந்து பக்தி பாடல்களை பாடி சாரதாம்பாளை மனமுருக வழிபட்டனர்.

Night
Day