சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேக நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேக நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீரால் சிவாச்சாரியார்கள் வருஷாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day