சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற லட்சுமி குபேர பூஜை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் லட்சுமி குபேர பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. லஷ்மி குபேர உற்சவமூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் சுவேதாரண்யேஸ்வரர் நூற்றாண்டு மண்டபத்தில் எழுந்தருளி குபேர பூஜை மூலம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு லட்சுமி குபேர நாணய பிரசாதம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேனா, நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவமூர்த்தி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day