செங்கல்பட்டு: ஶ்ரீ தலசயன பெருமாள் ஆலயத்தில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீ தலசயன பெருமாள் ஆலயத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி செண்டை மேளம் முழங்க மங்கள வாத்தியத்துடன் யாக சாலையில் இருந்து புனித நீர் உள்ள கலசத்தை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். பின்னர் கோயில் விமானம் மற்றும்  ஸ்ரீ தல சயன பெருமாளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day