செட்டி அய்யனார் ஆலயத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரை எடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா மற்றும் வருஷாபிஷேக நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் உள்ள செட்டி அய்யனார் ஆலயத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அரியனேந்தல் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து குதிரை, காளை மாடு உள்ளிட்ட சிலைகளை ஆண்கள் தலையில் சுமந்தும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து செட்டி அய்யனார் கோவில் முன்பு வைத்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து அய்யனாருக்கு 16 வகையான அபிஷேகம் செய்து வருடாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Night
Day