சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் ..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெற்றது. சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவம்  நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடித்து இழுத்தனர். 
 

Night
Day