தஞ்சை: சுவாமிநாதசாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் கொடி மரம் அருகே எழுந்தருளினார்.  தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யானை உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Night
Day