தரிசன டிக்கெட்டுகளுடன் வருபவர்களுக்கு "Unlimited" லட்டுகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட்டுகளுடன் வருபவர்கள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்பட்டால் ஒரு லட்டுக்கு 50 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாகி சியாமாளா ராவ், சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு, 50 ரூபாய் விலையில் அன்லிமிட்டெட் லட்டுகள் வழங்கப்படும் என்றார். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

varient
Night
Day