திருவாரூர்: கண்ணாயிரநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர், ஸ்ரீ கண்ணாயிரநாதர், ஸ்ரீ கைலாசநாயகி, ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர், ஸ்ரீ நடராஜர் ஆகிய சுவாமிகளின் விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்‍கு நடந்தேறியது. ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று மனமார பிரார்த்தனை செய்தனர்.

varient
Night
Day