நாகை: நீலாயதாட்சி அம்மன் கோயிலில் 1008 பால்கட ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக அமைதிக்காகவும் மீன் வளம் பெருக வேண்டியும் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராம மீனவர்களின் சார்பில் ஆயிரத்து எட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மீனவ பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தும், கிராம மக்‍கள்  மீன் கொடியினை கையிலேந்தி சீர்வரிசை தட்டுகளுடனும் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திற்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதன்பின்னர் அம்மனுக்‍கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day