நெல்லையப்பர் கோயிலில் ஏற்றப்பட்ட பத்திர தீபம் : 4 மாட வீதிகளில் வலம் வந்த பஞ்ச மூர்த்திகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தை அமாவாசை ஒட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்திர தீபம் ஏற்றப்பட்டது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவாலயமான காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் கோயில் மணிமண்டபம் முன்பு தங்க விளக்கு ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர் சன்னதி, அம்மன் சன்னதி வெளிப்பிரகாரம், ஸ்ரீ ஆறுமுக நயினார் திருக்கோவில் வெளி பிரகாரம் ஆகிய இடங்களில் பத்திர தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னர், ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் எழுந்தருள பஞ்ச மூர்த்திகளின் 4 மாட வீதியுலா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Night
Day