நெல்லை: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட வாகன வீதியுலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிரசித்தி பெற்ற வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக கருட வாகன வீதியுலா நடைபெற்றது. பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அலங்கரிக்‍கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். திருவரமங்கை தாயார் அன்ன வாகனத்திலும், ஆண்டாள் வெள்ளிக்கிளி வாகனத்திலும் எழுந்தருள சப்பர வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

Night
Day