பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் கோவிலில் யோகி பாபு குடும்பத்துடன் தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் யோகிபாபு தனது பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகிபாபு நேற்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்தார். மூலவர், சண்முகர் உட்பட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த யோகிபாபுக்கு நரிக்குறவ சமுதாய மக்கள் துளசிமாலையை பரிசாக ஆசையுடன் அணிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த தூய்மை பணியாளர்களுடனும் யோகிபாபு புகைப்படம் எடுத்து கொண்டார். 

Night
Day