புதுச்சேரி: ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நெல்லுமண்டி பகுதியில் நெல்லுமண்டி விநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 27ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனிதி நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day