பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பட்டானுாரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலை போன்று, புதுச்சேரி- திண்டிவனம் புறவழிச் சாலை விழுப்புரம் மாவட்டம் வானூர் பட்டானுாரில் அமைந்துள்ளது பூரி ஜெகன்நாதர் கோவில். ஜெகன்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் பலவண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர்திருவிழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day