மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் நடைபெற்ற பங்குனி தேரோட்டம் உள்ளிட்ட விழாக்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க சுப்ரமணியசுவாமி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின் முருகப்பெருமான் தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வாசலிலிருந்து புறப்பட்ட தேரை வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Night
Day