மயிலாடுதுறை: பொன்னம்மா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சென்னியநல்லூர் கிராமத்தில்  25 அடி உயர பொன்னம்மா காளியம்மன் சிலை கொண்ட கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து கோபுர விமானத்தின் மீது ஊற்றி குடமுழுக்‍கு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்‍கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day