மயிலாடுதுறை: ஸ்ரீ சுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அம்பாளுக்கு முன்பு எதுவும் உயர்ந்தது இல்லை என்பதை உணர்த்தும் வகையில், தங்கம், வெள்ளி, பட்டு உள்ளிட்டவையும், மரத்தால் ஆன விவசாய உபகரணங்கள் யாகத்தில் இட்டு, உலக நன்மை மற்றும் விவசாயம் செழிக்‍கவேண்டி நாகத்தம்மனுக்கு சிறப்பு பூர்ணாகதி நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. மகா பூர்ணாகதியின் போது 21 கன்னிகள் யாக மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். 

Night
Day