மாடுபிடி வீரர்களை பந்தாடி வெற்றி வாகை சூடியது "புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை"

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு 
போட்டியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் காளை மாடு பிடி வீரர்களை பந்தாடி வெற்றி வாகை சூடியது.

வெள்ளலூரில் உள்ள ஸ்ரீ மந்தை கருப்பண்ணசுவாமி கோவில் திருவிழாவையொட்டி அங்குள்ள பெரிய கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, சிவகங்கை ,புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. இதனைத்தொடர்ந்து,வெள்ளலூர் கோவில் காளைக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அழைத்து வரப்பட்ட மற்ற காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் காளை, மாடு பிடி வீரர்களை பந்தாடி வெற்றி வாகை சூடியது.

Night
Day