வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஜெயந்தி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுதர்சன ஜெயந்தி விழாவை யொட்டி சன்னதி வளாகம் முழுவதும் பல்வேறு வகை மலர்களாலும், பழ வகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day